கொள்ளு குழம்பு
தேவையானவை:
கொள்ளு - அரை ஆழாக்கு,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு,
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியா தூள் - 3 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க:
சின்ன வெங்காயம் - 2 கையளவு,
தக்காளி - 4,
பூண்டுப் பல் - 6.
செய்முறை:
கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்:
ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக