பொரிவிளங்காய் உருண்டை
தேவையானவை:
பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு,
கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு,
வெல்லம் - அரை ஆழாக்கு,
ஏலத்தூள் - ஒரு சிட்டிகை,
சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக